கோவை நர்சிங் மாணவி எங்கோ மாயம்..!

கோவை பீளமேடு செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் பார்வதி முத்து. இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 19 ) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மருத்துவமனைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அங்குள்ள தனது தோழியை பார்ப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர். மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை பார்வதி முத்து பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.