கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தொண்டுப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப் (வயது 28 ) இவர் மீன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் மதீனா நகரை சேர்ந்த முகமது யாசின் பாபு ( வயது 27) இவர்களுக்கும் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைப்பகுதியைச் சேர்ந்த கவி என்கிற கருப்பசாமி ( வயது 22) எஸ்.எம்.ஆர். புரத்தைச் சேர்ந்த கவி என்கிற கர்ணன் ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே முகமது யாசின் பாபு ,முகமது ஆசிப் ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ்ரோட்டில்ஒரு கடை முன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கருப்பசாமி ,கர்ணன் ஆகியோர் முகமது யாசின் பாபுவுடன் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதை யடுத்து இருவரும் திடீரென கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து முகமது யாசின் பாபு தலையில் ஓங்கி அடித்தனர். தடுக்க வந்த முகமது ஆசிப் பையும் தாக்கிவிட்டுதப்பி ஓடிவிட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முகமது யாசின் பாபு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முகமது யாசின் பாபு இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கருப்புசாமி, கர்ணன் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
கோவையில் மரக்கட்டையால் தாக்கி வாலிபர் படுகொலை – 2 பேர் கைது..!
