கோவை ரத்தினபுரி ,பாலுசாமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மகன் மணிகண்டன் ( வயது 29) இவர் கண்ணப்ப நகரை சேர்ந்த முத்து கருப்பையாவின் மகனை காதலித்து வந்தாராம். இதை முத்து கருப்பையா கண்டித்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த முத்து கருப்பையா, மணிகண்டனை கத்தியால் குத்தி தடியால் தாக்கினாராம் . அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து முத்து கருப்பையாவை கைது செய்தார்..
மகளை காதலித்த ஆத்திரத்தில்… வாலிபரை கத்தியால் குத்திய தந்தை..!
