கோவை சிங்கநல்லூர் பக்கம் உள்ள நீலி கோணாம்பாளையம் சின்னத் தோட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் .இவரது மனைவி ராதா (வயது 36) இவர் மகளிர் சுய உதவி குழுவில் ரூ 2 லட்சம் கடன் வாங்கி இருந்தார் .அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த ராதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சாணி பவுடரை குடித்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து கணவர் லட்சுமணன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடன் திருப்பி கொடுக்க முடியாததால்… பெண் தற்கொலை..
