சாமி கும்பிடும் போது விளக்கு தீ சேலையில் பட்டு மூதாட்டி பரிதாப பலி..

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள ஜாகிர் நாயக்கன்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவரது மனைவி குஞ்சம்மாள் ( வயது 76) இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 4-ம்தேதி இவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக விளக்கு தீ சேலையில் பட்டது. இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மகள் பத்மாவதி ஆலந்துறை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.