காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முதல் இன்று 13-ம் தேதி வரை 2 நாட்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1) கோவை to மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பஸ்கள் மற்றும் கார்கள் அனைத்தும் கோட்டைப்பிரிவு கடந்து சக்தி பொறியியல் கல்லூரி வளைவில் இடது புறம் திரும்பி பி.ஜி. புதூர், திம்மம்பாளையம் மற்றும் தோலம்பாளையம் ரயில்வே கேட்டில் இடதுபுறம் திரும்பி மங்களக்கரை புதூர் வழியாக டீச்சர்ஸ் காலணி சென்று மேட்டுபாளையம் செல்ல வேண்டும்.
2) மேட்டுப்பாளையம் to கோவை செல்லும் வாகனங்கள் காந்திநகர் அருகே இடதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், கண்ணார்ப்பாளையம், களத்தியூர் ரயில்வே கீழ் பாலம் வழியாக கோட்டை பிரிவு சென்று கோவை செல்ல வேண்டும்.
3) கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து கண்டெய்னர் லாரிகளும் கோட்டை பிரிவு, களத்தியூர் ரயில்வே கேட், கண்ணார்பாளையம் நான்கு வழி சந்திப்பு, தென்திருப்பதி நால்ரோடு வழியாக மேட்டுபாளையம் செல்ல வேண்டும். 4மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை செல்லும் அனைத்து கண்டெய்னர் லாரிகளும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலை வழியாக, தென்திருப்பதி நால்ரோடு சென்று வலது புறம் திரும்பி கண்ணார்பாளையம், களத்தியூர் ரயில்வே பாலம் வழியாக கோவை செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.