கோவை தெற்கு உக்கடம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் காளிதாஸ் ( வயது 70 )இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பாலம்மாள் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முதியவர் தூக்கிட்டு தற்கொலை..
