நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மலர்கள் காட்சிக்கு வரும் 2025 மே மாதம் நடைபெற இருக்கும் 127வது மலர் காட்சியை முன்னிட்டு
இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் (15.03.2025) துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது:-
உதகை, அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2025 மே மாதம் நடைபெற இருக்கும் 127வது மலர் காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகள் அமைத்து, பல வண்ண மலர்ச் செடிகள் நடவு செய்ய விரிவான ஏற்பாடுகள் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செய்யப்பட்டுள்ளது, இதனை கருத்திற்கொண்டு, இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு
போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியினை இன்று துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற்றும் பல புதிய இரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சன்பிளவர், சிலோசியா, ஆன்டிரைனம், டயான்தஸ், ஆஸ்டர், ஜெர்பரா, க்ரைசாந்திமம், டெல்பினியம், சால்வியா, ஆந்தூரியம் போன்ற
275 வகையான விதைகள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும்
நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்டு மலர்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 7.5 இலட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன,நடவு செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கு பனியின் தாக்கம் ஏற்படாத வண்ணம் கோத்தகிரி மிலார் செடிகளைக் கொண்டு பாதுகாப்பு செய்யப்படும். இவ்வாண்டு எதிர்வரும் மலர்க் காட்சியினையொட்டி மலர்க்காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் 40,000 வண்ண மலர்த் தொட்டிச் செடிகள் அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
தெரிவித்தார்,.இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் .ஷிபிலா
மேரி, உதகை வருவாய் கோட்டாட்சியர் சதிஸ், உதவி இயக்குநர்கள் பைசல் (உதகை தாவரவியல் பூங்கா), விஜியலட்சுமி (குன்னூர் சிம் பூங்கா), ஐஸ்வர்யா (கோத்தகிரி நேரு பூங்கா), ஜெயந்தி (நடவு பொருட்கள்), தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் தோட்டப்பணியாளர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்..
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் காட்சி… 275 வகையான விதைகள்,7.5 இலட்சம் நாற்றுகள் நடும் பணி துவக்கம்..!
