தமிழகத்தில் டாஸ்மாக் டெண்டரில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன் , வினோஜ் பி.செல்வம், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், எச்.ராஜா என பல்வேறு பாஜக மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிரான பாஜகவின் இந்த போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து இருந்தார். திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் , ” டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம். டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜகவினர் போராடுவதை நாங்கள் வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.
மேலும், “மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும், அவைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ” என திருமா கூறியிருந்தார். பாஜக முன்னெடுத்த இந்த போராட்டத்தை திருமாவளவன் ஆதரவு தெரிவித்த நிலையில் இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பதில் அளிக்கையில், ” விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவிக்க கூடாது. எங்களோடு சேர்ந்து போராட வேண்டும். தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் இந்த போராட்டத்தை அவர்களும் முன்னெடுக்க வேண்டும்.” பேசியிருந்தார்.