பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு – வாலிபர் கைது..!

கோவையை சேர்ந்தவர் முகமது அனாஸ் ( வயது 22) இவர் மீது பள்ளிகூட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்போது அவர் கோவை மத்திய சிறை அடைக்கப்பட்டுள்ளார் முகமது அனாஸ் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர் போலீஸ் கமிஷனர் சரவணகுமாருக்கு பரிந்துறை செய்யப்பட்டது. அதன் பெயரில் அவர் முகமது அனாசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் இருக்கும் முகமதுஅனாசிடம் நேற்று வழங்கப்பட்டது.