மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்ற முதியவர் திடீர் உயிரிழப்பு.

கோவை ஏப் 28 கோவை பீளமேடு எஸ். ஐ. எச். எஸ் காலனி உள்ள ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாரூக் ( வயது 63) இவர் நேற்று தனது மனைவி சபியா பேகத்துடன் சின்னியம்பாளையம், சிவன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மனைவி சபியா பேகம் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.