சென்னை: விஜய் தனது கட்சியில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள குழந்தைகள் விஜய் பின்னால் வந்து படிப்பதை நிறுத்தி விடக்கூடாது என்று தமிழிசை கூறியுள்ளார்.தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு நாம் எல்லோரும் மனம் வருந்தி நின்று கொண்டிருக்கிறோம்.
நேற்று முன்தினம் என் தந்தை ஆன்மா சாந்தியடைய காசி சென்றிருந்தேன். அப்போது உயிரிழந்த மக்களுக்காகவும் வேண்டிக் கொண்டேன். இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கு நாம் வலுசேர்க்க வேண்டும். இந்த சம்பவத்தில் விமர்சிக்க கூடிய வகையில் கருத்துக்களை தெரிவித்தால் அவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று தான் கருத வேண்டும். விமர்சிப்பவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.
நாட்டிற்காக பாஜவோடு மற்ற கட்சிகள் இணைந்திருப்பது நல்லது, அது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் நடந்துள்ளது. தம்பி விஜய் களத்திற்கு இறங்கி வந்திருப்பது மகிழ்ச்சி. காணொலியில் இருந்து கொண்டு வொர்க் பிரம் ேஹாமில் இல்லாமல், ஒர்க் ப்ரம் பீல்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இன்னொரு வேண்டுகோள். என்னவென்றால் வாக்கு அளிக்கும் வயது அல்லாதவர்கள் கூட அங்கே நிறைய பேர் காணப்பட்டார்கள், குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள குழந்தைகள் விஜய் பின்னால் வந்து படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. 2026ல் களம் எப்படி இருந்தாலும் மத்தியில் பலமாக ஆளும் பாஜ கட்சியும், இதற்கு முன்னால் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.