சிகரெட்டால் நேர்ந்த விபரீதம்… வாலிபர் உடல் கருகி பலி..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள ஊஞ்சபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் .இவரது மகன் ரஞ்சித் (வயது 24 )வெல்டிங் தொழில் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் .அவரது வீட்டில் படுத்துக் கொண்டே சிகரெட் பற்ற வைத்தார். அப்போது அவரது ஆடையில் தீ பிடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார்.இது குறித்து அவரது மனைவி சீமா என்ற சங்கீதா கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.