ஓடும் பேருந்தில் ஆசிரியை பையில் இருந்த 3 பவுன் செயின் திருட்டு..!

கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள கே .அய்யம்பாளையம் ராஜிவ் காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 32) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினருடன் கோவைக்கு நகை வாங்க வந்தனர். கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் 3 பவுன் நகை வாங்கி அதை பையில் போட்டு வைத்திருந்தனர். பின்னர் அங்குள்ள துணி கடைக்கு துணி எடுக்க சென்றனர். இதையடுத்து ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ஒப்பணக்கார வீதியில் இருந்து சுங்கத்துக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இவரது பையில் இருந்த 3 பவுன் தங்க செயினை யாரோ திருடிவிட்டனர். இது குறித்து முத்துலட்சுமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் ,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..