வால்பாறையில் சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சோகம்… நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய எம்.பி. ஈஸ்வரசாமி..!

தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க தமிழக துணை முதல்வர் ஆலோசனையின் பேரில் , கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வால்பாறை அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் முன்னிலையில் தமிழக அரசு வழங்கும் ரூ.10 லட்சம் நிவாரண தொகையில் முதற்கட்ட இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரம் ரூபாயை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நகர, மாவட்ட, சார்பு அணி, மக்கள் பிரதிநிதிகள் ,தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்..