வேன் மோதி பேக்கரி தொழிலாளி சாவு..! 

வேன் மோதி பேக்கரி தொழிலாளி சாவு..!  கோவை புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி பக்கம் உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்தவர் அப்பாவு அடைக்கண் (வயது 54) இவர் ஒத்தக்கல் மண்டபம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை ரோட்டில் பிரிமியர் மில் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்தவழியாக வேகமாக வந்த டெம்போ வேன் இவர் மீது மோதியது .இதில் அப்பாவும் அடைக்கண் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்த அவரது மகன் மணிகண்டன் செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.