போட்டோ ஸ்டூடியோவில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேமரா திருட்டு..!

கோவை திருச்சி ரோடு, நாடார் காலனியை சேர்ந்தவர் கஜனத்விர் (வயது 28) இவர் நாடார் காலணியில் உள்ள ஸ்டூடியோவில் கடந்த 6 ஆண்டு மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி ஸ்டுடியோவில் மின் கசிவு காரணமாக திடீரென்று தீப்பிடித்தது . இது குறித்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 24 ஆம் தேதி ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை சரிபார்த்த போது 2 கேமராக்கள் மற்றும் பொருள்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதன் மதிப்புரூ 2 லட்சம் இருக்கும் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் கஜனத்தவீர் புகார் செய்தார் . புகாரில் அந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்த ஊழியர்கள் தினேஷ் உட்பட 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..