சமூக வலைதளத்தில் இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு..!

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 42) சமூக ஆர்வலர் .இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் முகநூல் பக்கத்தில் முகில் என்பவர் ராமர் குறித்தும் இந்து மதம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய யூடியூப்பர் முகில் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.