கோவை பேரூர் ஆதீனமாக மருதாசலம் அடிகளார் உள்ளார். இவர் தமிழக அரசு அறிவித்துள்ள கோவில்கள் மேம்பாட்டுக்கான உயர்மட்ட ஆலோசனை குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் சண்டீகேசுவர நாராயணன் நற்பணி சங்கத்தை சேர்ந்த சுரேஷ்பாபு கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் மருதாசலம் அடிகளார் குறித்து, கோவையை சேர்ந்த சிலர் வாட்ஸ்-அப் மூலம் அவதூறு பரப்பி வருகிறார்கள். அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் சைவ சமய அன்பவர்கள், மடாதிபதிகள், மருதாசல அடிகளார் ஆகியோர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். விஷம பிரசாரம் மேற்கொள்ளும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு..!
