சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குபதிவு..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்,சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி . இவரை திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை, சக்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வீரமணி மகன் தினேஷ் குமார் ( வயது 23 ) என்பவர் சட்ட விரோதமாக திருமணம் செய்து கொண்டு சுந்தராபுரம் , மாச்சம் பாளையம் ,அம்மணி அம்மாள் காலனியில் வசித்து வந்தார். இதுகுறித்து மதுக்கரையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக அதிகாரி அமுதா சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி 16- வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட தினேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார். இவர் சிட்கோவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்..