கோவை சிங்காநல்லூர் அய்யர் லே. அவுட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார் .இவரது மனைவி ஜெயசூர்யா ( வயது 31)குடும்பத் தகராறு காரணமாக நேற்று இவரை அவரது கணவர் சதீஷ்குமாரும்,மாமனார் தாமோதரனும் சேர்ந்து காலால் மிதித்து, அடித்து உதைத்தார்களாம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மனைவி ஜெய் சூர்யா சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரணை நடத்தி கணவர் சதீஷ்குமார், மாமனார் தாமோதரன் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இவர்கள் 2 பேரையும் தேடி வருகிறார்கள்..
மனைவியை தாக்கிய கணவர், மாமனார் மீது வழக்குபதிவு..!
