மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசிய இந்து முன்னணி தலைவர் மீது வழக்குபதிவு..!

கோவை குனியமுத்தூர், ரைஸ் மில் ரோட்டில் கடந்த 9-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் குனியமுத்தூர் இந்து முன்னணி தலைவர் பிரபாகரன் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசினாராம் .இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இந்து முன்னணி நிர்வாகி பிரபாகரன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..