செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால்… கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..

கோவை தடாகம் அருகே உள்ள சோமையனூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் எழிலரசி (வயது 17) இவர் தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் வீட்டில் அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் மனமுடைந்த எழிலரசி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் கயிற்றை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து தந்தை மூர்த்தி தடாகம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.