காரில் பைக்கை மோத விட்டு கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறிப்பு..!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேத்தாஜி நகரை சேர்ந்தவர் பொன்னையா, இவரது மகன் பால கார்த்திக் ( வயது 22 ) குனியமுத்தூர் இல் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இவர் தனது காரில் நவ இந்தியா சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் கார் மீது பைக்கை மோத விட்டார். இதை பாலகார்த்திக் தட்டி கேட்டார் .இதனால் அவர்கள் தகராறு ஏற்பட்டது. பின்னர் பால கார்த்திக் அங்கிருந்து காரை ஒட்டிச் சென்றார். அப்போது அவரது காருக்குள் வைத்திருந்த செல்போன் ,பணம் ரூ 700 ஆகியவற்றை காணவில்லை. இவரிடம் தகராறு செய்தவர் தான் அந்த பணத்தை திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சாமியை தேடி வருகிறார்கள்.