கோவையில் நண்பர்களுடன் தடுப்பணைக்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாப பலி..

கோவை துடியலூர் அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்தவர் மனோ (வயது 19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் ஆலந்துறை அருகே நரசிபுரம் தடுப்பணையில் தனது நண்பர்களான ஓம் பிரகாஷ், கிருபாகரன், சபரிஷி ஆகியோருடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மனோ திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். தண்ணீரில் மூழ்கிய மனோ வெளியே வராததால் அவரது நண்பர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மனோவின் உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .இது குறித்து ஆலந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.