12 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்..

கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம், ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலா .இவரது மகன் அசோக் (வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6 – ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அசோக் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கோகுல் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய் ஒன்று சுற்றுச் சுவரை தாண்டி வெளியே வந்தது. தொடர்ந்து அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை துரத்தியது. இதை சற்றும் எதிர்பாராத அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அப்போது அசோக் தவறி கீழே விழுந்தார். உடனே அவனை அந்த நாய் கடித்துக் குதறியது. இதில் கை, கால் ,இடுப்பு உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்ததால் அசோக் அலறி துடித்தான். அவனது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து நாயை துரத்தி அசோக்கை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் அசோக்கின் தந்தை பாலா புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.