கோவை திமுக செயலாளர் மீது வேலைக்கார பெண் பாலியல் புகார்..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வடவள்ளி யை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கணவருடன் வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 5 ஆண்டுகளாக திமுக 40 வது வார்டு செயலாளர் கதிரேசன் என்பவரின் வீட்டில் குடும்ப சூழலை காரணமாக வீட்டு வேலை பார்த்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக எனக்கு கதிரேசன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரது பாலியல் தொல்லை தாங்க முடியாததால் இதுகுறித்து அவரது மனைவி யிடம் தெரிவித்தேன். ஆனால் அதற்கு அவர் இதை நீ பெரிது படுத்தக்கூடாது. இதை வெளியே சொன்னால் நீ எனது வீட்டில் நகையை திருடி விட்டாய் என்று போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார் .இதனால் நான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 40 -வதுவார்டு திமுக செயலாளர் தனது வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.