மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த முன்னாள் ராணுவ வீரரிடம் தங்கச் செயின் திருட்டு..!

திருச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 61 ) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் . இதற்காக சிகிச்சை பெறுவதற்கு வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள பவித்ரா இயற்கை மருத்துவமனைக்கு கடந்த 6-ந் தேதி வந்திருந்தார். அங்குள்ள அறையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் இவரை உடல் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது அவரது அறையில் அவர் பையில் வைத்திருந்த 7 1/2 பவுன் தங்கச் செயினை காணவில்லை . யாரோ திருடிவிட்டனர். இது குறித்து ராமகிருஷ்ணன் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் கதிர்வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..