சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் நகை தொழிலாளி தற்கொலை..

கோவை கெம்பட்டி காலனி 4 -வது வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 49 ) சொந்தமாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு சூதாட்டம் மற்றும் புறா பந்தயம் பழக்கம கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் அவரது நகை பட்டறையில் சயனைடு சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி பிரேமா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்..போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..