5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை.!!

கோவை போத்தனூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது 51) கூலி தொழிலாளி .இவர் கடந்த 21 .3 .20 20 ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக குழந்தைகள் நல அலுவலர் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த குழந்தைகள் நல உறுப்பினர் ஆஞ்சலின் இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார் ..போத்தனூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி முருகேஷ்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சம் அளிக்க அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரக்ஷிதா பேகம் ஆஜராகி வாதாடினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகேஷ் தற்போது கஞ்சா வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.