விஜய் எழுதிய கடிதம்… இதய வாசலை திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்..!!

மிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் நடைபெறுவதையொட்டி தலைவரும், நடிகருமான விஜய் தொண்டர்களுக்கு உற்சாகக் கடிதம் ஒன்றை எழுதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம். நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவிவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும் போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதயவாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்.
வாருங்கள் மாநாட்டில் கூடுவோம்.

நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதி பூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம். என்று தவெக தலைவர் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

இதனிடையே மாநாட்டிற்கான முழு ஏற்படுகளும் 90% முடிவடைந்துள்ளது. தினசரி துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநாடு நடக்கும் இடத்தில் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய அனைத்து பாதுகாப்பு முறைகள் குறித்து ஆலோசனை வழங்கிச் சென்றனர்..