நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவரை மாடு முட்டியதால் சிமெண்ட் கலவை லாரி ஏறி பரிதாப பலி..

தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள நல்லூர் நெடுஞ்சாலையில் கடலூரைச் சேர்ந்த தர்ம துரை வயது 30. தகப்பனார் பெயர் சக்கரவர்த்தி. தனக்கு சொந்தமான tn19 as5653 என்ற பதிவெ ண் கொண்ட ஹோண்டா சைன் மோட்டார் சைக்கிலில் குன்றத்தூர் நோக்கி செல்லும் போது சாலையின் குறுக்கே முரட்டுத்தனமாக ஆக்ரோஷமாக ஓடி வந்த மாடு தர்மதுரை ஓ ட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது வெறித்தனமாக எகிறி குதித்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழ பின்னாடி வேகமாக வந்த சிமெண்ட் கலவை லாரி tn85q8460 என்ற பதிவை கொண்டது. தர்மதுரை வயி ற்றின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் கோபி வயது39. தகப்பனார் பெயர் கிருஷ்ண ய ய்யா என்பவனை சி சி டிவி யில் பதிவாகிய காட்சிகளை வைத்துகைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதி வேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து போக்குவரத்து போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபத்தில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.