போலீசாக நடித்து பணம் பறித்த நபர் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40) கூலித்தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையம் – அன்னூர் ரோட்டில் இருந்து அய்யப்பன் நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அந்த நபர் பெரிய சாமியிடம் இருசக்கர வாகனங்களுக்கான ஆவணங்களை கேட்டார்.. உன்னிடம் போதிய ஆவணங்கள் இல்லை .எனவே உன் மீது பொய் வழக்கு பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டினாராம். வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ.500 கொடுக்க வேண்டும் என்று மிரட்டி பறித்து கொண்டார்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் பெரியசாமி புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெரிய தொட்டி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ( வயது 40) என்பதும்,போலி போலீஸ்காரர் என்பதும் தெரிய வந்தது . அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..