சூலூரில் வீடு புகுந்து திருட முயன்றவர் அடித்துக் கொலை..!

கோவை அருகே உள்ள சூலூரில் ஒரு வீட்டில் நேற்று இரவு திருட முயன்ற ஒருவர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். அவரது பெயர் சமீர் என்று கூறப்படுகிறது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..