மகனை பயமுறுத்த கழுத்தில் சேலையை கட்டி தற்கொலை செய்வதாக மிரட்டிய தாய் சாவு.. கோவை: மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அப்பநாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர் .இவரது மனைவி யமுனா பானு ( வயது 34) இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகனும், மகளும் உள்ளனர் .மகன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வருகிறார் .நேற்று மகன் பள்ளிக்கூடத்திற்கு போக மாட்டேன் என்று கூறினாராம்.நீ பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை என்றால் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி நடித்தாராம்.அப்போது எதிர்பாராத விதமாக தாயின் கழுத்தில் சேலை இறுக்கி மயங்கினார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்தார். இது குறித்து அவரது தம்பி ஜீவா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மகனை பயமுறுத்த கழுத்தில் சேலையை கட்டி தற்கொலை செய்வதாக மிரட்டிய தாய் சாவு..
