மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தாய் கீழே விழுந்து பரிதாப பலி

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள கருவலூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 53) இவர் நேற்று தனது மகளுடன் ஸ்கூட்டரில் கோவில்பாளையம்- கருவலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார் .இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது தம்பி ராமச்சந்திரன் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.