போலி ஆவணங்கள் மூலம் ஆள் மாறாட்டம் செய்து ரூ.2 கோடி 10 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்தவர் கைது..!

ஆவடி காவல் ஆணையரங்கம் மத்திய குற்ற பிரிவில் ஷலஜா கணவர் பெயர் ராம் மனோகர் ரித்தர்டன் சாலை வேப்பேரி சென்னை என்பவர் கொடுத்த புகாரில் வரதராஜபுர கிராமம் கே வி ஆர் நகர் பிரசாந்த் நகர் மற்றும் 9 மனைகள் சைலஜாவின் தந்தை ரோசி நாயுடு பெயரில் உள்ளது. சைலஜாவின் தந்தை 2011 ம் ஆண்டு காலமானார். அதன் பின்னர் சைலஜாவின் அனுபவத்திலிருந்துவந்தது. இறந்த சைலஜாவின் தந்தை போன்று போலியான கையொப்பம் போட்டு ப வர் பதிவு செய்து ஆள் மாறாட்டம் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ 1 கோடியே 40 லட்சமாகும். சம்பத் தகப்பனார் பெயர் கோவிந்தன் சாரங்கபாணி முதலியார் தெரு நெமிலி வட்டம் ராணிப்பேட்டை மாவட்டம். என்பவர் கொடுத்த புகாரில் சம்பத் ஓய்வு பெற்ற ஆசிரியர்.ஓய்வு பெற்ற பணத்தை கொண்டு தனது இளைய மகளான கோபித நவீனா விற்கு கே வி ஆர் நகர் பிரசாந்த் நகர் பகுதியில் 1980 சதுர அடியில் ரூபாய் 70 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்து போலியான இடத்தினை தனசேகரிடம் பெற்று ஏமாந்து உள்ளார். மேலே குறிப்பிட்ட இரண்டு வழக்குகளில் யும் சம்பந்தப்பட்ட தனசேகர் தக ப் பனார் பெயர் கோவிந்தசாமி என்பவர் நி ல புரோக்கராக செயல்படும் பொழுது கொளத்தூரைச் சேர்ந்த சரத் பாபு மற்றும் கோயம்பேட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராமகிருஷ்ணன் என்பவர்கள் அறிமுகமானார்கள்.அப்போது தனசேகர் நீண்ட நாட்களாக எவ்வித பதிவு இல்லாமல் இருக்கும் நிலத்தினை தெரிந்து கொண்டு மேற்படி இடத்திற்கு போலியான நபர்களைக் கொண்டு கிரயம் செய்து லாபம் பெறலாம் எனக் கூறியதை அடுத்து சைலஜாவின் தந்தை ரோஸி நாயுடு நிலத்தை தேர்வு செய்தும் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரியும் எல்பி சந்திரன் அவர்களின் இடத்தையும் தேர்வு செய்து போலியான நபர்களை அழைத்து வந்து நண்பர்களுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி மோசடி குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் மதிப்பு ரூபாய் 2 கோ டியே 10 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இது சம்பந்தமாக கொடுத்த புகாரின் பேரில் நிலப் பிரச்சனை தீர்வு பிரிவு ஆய்வாளர் ஜெய்சங்கர் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையாளர் கே. சங்கர் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் தலை மறைவாக இருந்த குற்றவாளி தனசேகர் வயது 45. தகப்பனார் பெயர் கோவிந்தசாமி. காந்தி தெரு கன்னிகாபுரம். ஆவடி கேம்ப் சென்னை. அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியவர். பு ழல் மத்திய சிறையில் அடைக்கப்பட் டான்.