கள்ள சந்தையில் மது விற்பனை செய்தவரை பிடித்த போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்..!!

கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் மோகன் குமார் .இவர் நேற்று கவுண்டம்பாளையம் – நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரியவந்தது .இதை யடுத்து அவரை மடக்கி பிடித்தார்.அப்போது அந்த ஆசாமி ஏட்டு மோகன் குமாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்தனர் ,விசாரணையில் அவர்விருதுநகர் மாவட்டம் சிவகாசி பக்கம் உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி (வயது 29)என்பது தெரியவந்தது.தற்போது கவுண்டம்பாளையம் நடராஜ் வீதியில் வசித்து வந்தார். இவரிடமிருந்து 22 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.