ஆன்மீக சுற்றுலா சென்ற பள்ளி மாணவி திடீர் மரணம்..

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவை சேர்ந்தவர் மலையரசன் .இவரது மகள் தரணிஸ்ரீ (வயது 9) ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார் .இவர்கள் தங்கள் ஊரைச் சேர்ந்த 42 பேருடன் ஆன்மீக சுற்றுலாவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்தனர். அவர்கள் 2 மினி பஸ்களில் கடந்த 14ஆம் தேதி இரவு சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு 15ஆம் தேதி பவானி சென்றனர். அங்கிருந்து கோவை மருதமலை கோவிலுக்கு சென்று விட்டு மாலையில் ஈஷா மையத்துக்கு சென்றனர். இதை அடுத்து அவர்கள் ஊருக்கு செல்ல மாதம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது தரணி ஸ்ரீ க்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது .உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தரணி ஸ்ரீ வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..