கோவை தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த பாம்பு – பிடிக்க முயன்ற பாம்புபிடி வீரர் பாம்பு கடித்து பலியான சோகம்..

கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் முரளி. இவர் 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணி செய்து வந்தார்.நேற்று இரவு காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாம்பு புகுந்துள்ளதாக நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் முரளிக்கு தகவல் அளித்துள்ளனர். அந்நிறுவனத்தின் அறையில் புகுந்த பாம்பு பிடிக்க முயலும் போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு முரளியின் காலில் கடித்தது.
இதனால் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த முரளி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..