கோவையில் டிராவல்ஸ் பஸ்சில் திடீர் தீ விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 பயணிகள்.!!

திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு தனியாருக்கு சொந்தமான டிராவல்ஸ் பஸ் 30 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 6 மணி அளவில் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை முன் வந்தபோது இன்ஜினில் இருந்து புகை வந்தது . இதை பார்த்த டிரைவர் தாசன் பஸ்சை உடனே நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார் . இதையடுத்து 30 பயணிகளும் அவசர, அவசரமாக இறக்கி விடப்பட்டனர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இது பற்றி தகவல் அறிந்ததும் பீளமேடு, தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது தொடர்பாக பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..