கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்ற இறங்கிய வாலிபர் நீரில் மூழ்கி பலியான சோகம்..

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்அருகே உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 37) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி பானு என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.நேற்று தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு பூனை தவறி விழுந்து விட்டது. அந்தப் பூனையை மீட்பதற்காக கார்த்திக் கிணற்றினுள் இறங்கினார். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்தார் .அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இது குறித்து மனைவி பானு பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் லூர்துராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.