குடிபோதையில் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்- உயிருடன் மீட்ட லைப் கார்டு குழுவினர்.!!

கோவை மாவட்டம்  காரமடை பக்கம் உள்ள மங்கள கரை புதூர், எத்தப்ப நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஜித்குமார் (வயது 24) கட்டிட வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் நேற்று மாலையில் மது போதையில் பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அங்கு பணியில் இருந்த ” லைப் கார்டு ” எஸ்.ஐ. ராஜன் தலைமையிலான லைப் கார்டு குழுவினர் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு முதலுதவி அளித்து தக்க அறிவுரை கூறி உறவினர் சீனிவாசனுடன் அனுப்பி வைத்தனர்.