சுடுகாடு அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு..

கோவை ஆலந்தூரை , இக்கறை போளுவாம்பட்டியில் சுடுகாடு அருகே நேற்று ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 65 வயது இருக்கும். அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து கண்ணமநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தவல்லி ஆலந்துறை போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது..