கோவை ஏப்29 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்முதின் .இவரது மகன் சஜித் ( வயது 20) இவர் வடவள்ளி, டாட்டா நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் இவரை வழிமறித்துபணம் கேட்டனர்.அவர் இல்லை என்று கூறியதால் அவரை கூகுள் பே” மூலம் பணம் அனுப்புமாறு மிரட்டினார்கள். உடனே சஜித் ரூ. 16 ஆயிரம் அனுப்பி வைத்தார். பின்னர் அந்த நபர்கள் அவரிடமிருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர் .இது குறித்து சஜித் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகிறார்கள்.
வடமாநில தொழிலாளியை மிரட்டி “கூகுள் பே” மூலம் ரூ.16, ஆயிரம் மோசடி.
