காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலியான சோகம்..

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாகுகல் ஷேக் (வயது 20)கூலித்தொழிலாளி.இவர் ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.கடந்த 4-ந் தேதிஇவரது குழந்தையும் ராஜேஷ் குமாரின் குழந்தையும் வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காம்பவுண்ட் சுவர் திடீரென்றுஇடிந்து விழுந்தது.இதில் இரு குழந்தைகளும் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல்ஒரு வயது குழந்தை பாத்திமா நேற்று இறந்தது இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.