கார் மோதி இளம்பெண் பரிதாப பலி – தோழி படுகாயம்..

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள முள்ளுப்பாடி அரிசன காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கவுசல்யா (வயது 21) அதே பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி ( வயது 22 )இவர்கள் இருவரும் நேற்று பொள்ளாச்சி – கோவை ரோட்டில் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் கவுசல்யா இறந்து விட்டார். மகேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கவுசல்யாவின் தாயார சரஸ்வதி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். .இது தொடர்பாக கார் ஓட்டி வந்த பொள்ளாச்சி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரபு ( வயது 39 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..