குழந்தையை இடுப்பில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை..

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். (வயது 30) இவர் மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி ( வயது 28) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் அஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.நேற்று சந்தோஷ் வேலைக்கு சென்று விட்டார். அப்போது கலாமணி தனது மகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர் . இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள கிணற்று மேட்டில் கலாமணியின் செருப்பு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்து உறவினர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அங்கு கலா மணி மற்றும் குழந்தை அஸ்விகா ஆகியோர் பிணமாக கிடப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பிணமாக கிடந்த அவர்ளை மீட்டனர். அப்போது கலாமணி தனது மார்போடு சேர்த்து மகள் அஸ்விகாவை துணியால் இறுக கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து தெரிய வந்தது. அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.