திருமண ஆசை காட்டி பெண்ணிடம் நகை, பணம் அபேஸ் – மோசடி நபர் கைது..!

கோவை கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் செரின் (வயது 32) இவரை மதுக்கரை மரப்பாலம் நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த ரபீக் ( வயது 35) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 பவுன் நகையும், ரு. 80 ஆயிரம் பணமும் வாங்கினாராம். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து செரின் கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கம் ,சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரபீக்கை கைது செய்தனர். இவர் தற்போது மதுக்கரை மேட்டாங்காடு பகுதியில் வசித்து வருகிறார் . பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..