காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் – கணவர் உட்பட 4 பேர் மீது புகார்..!

கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் ஹரிஹரன் . இவரது மகள் அக்ஷயா ( வயது 27) இவரும் உடையாம்பாளையம் சுப்பநாயக்கன்புதூர் செல்லம்மாள் நகரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரும் 19-5- 20 24 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவர் சந்தோஷ்குமார், அவரது தம்பி சம்பத் மாமியார் சாவித்திரி, கணவரின் தங்கை ரெஜினா ஆகியோர் சேர்ந்து அக்ஷயாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து அட்சயா கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், சப் இன்ஸ்பெக்டர் வித்யா ஆகியோர் வழக்கு பதிவு செய் துவிசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கணவர் சந்தோஷ் குமார் அவரது தம்பி சம்பத் தாயார் சாவித்திரி, தங்கை ரெஜினா ஆகியோர் மீது தாக்குதல், வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.